கலக்கும் கேப்டன்: கலங்கும் கட்சிகள்!
சென்னை:
திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் அக்கட்சிகளிலிருந்து விலகி விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தில்இணைந்து வருவதால், அக்கட்சிகளுக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் அனைவரும் எதிர்பார்த்தது போல அதிக இடங்களில்விஜயகாந்த் கட்சி ஜெயிக்காவிட்டாலும் கூட சிறுபான்மை ஆட்சி ஏற்பட வழி வகுத்துவிட்டார் விஜயகாந்த்.தமிழகத்தில் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக மாறப் போகும் அறிகுறிகளைதேமுதிக வெளிக்காட்டத் தொடங்கியுள்ளது.
இந் நிலையில் திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், மதிமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்தபல முக்கியப் பிரமுகர்கள் தொடர்ந்து தேமுதிகவில் சேர்ந்து வருகின்றனர்.
அதிமுகவைச் சேர்ந்தவர்கள்தான் அதிக அளவில் விஜயகாந்த் கட்சியை நாடிவருகின்றனர். அதற்கு அடுத்து மதிமுகவிலிருந்தும், பாமகவிலிருந்தும் கட்சி மாறிவருகின்றனர். ஆளும் கட்சியாக இருப்பதாலோ என்னவோ, சம்பாத்தியத்தை ஏன்விட்டுவிட்டுப் போக வேண்டும் என்று கருதி திமுகவிலிருந்து விலகி வருவோர்கொஞ்சம் குறைவாகவே உள்ளனர்.
இதனால் விஜயகாந்த் உற்சாகம் அடைந்துள்ளார். பிற கட்சிகளிலிருந்து சேரவிரும்புபவர்களிடம் ஆரம்பத்தில் அவர் காட்டிய கெடுபிடிகளை தற்போது குறைத்துக்கொண்டு விட்டதாக தெரிகிறது.
தினசரி நூற்றுக்கணக்கான மாற்றுக் கட்சியினர் சென்னை கோயம்பேட்டில் உள்ளவிஜயகாந்த்தின் கல்யாண மண்டபத்தில் தேமுதிகவில் சேருவதற்காக வரிசை கட்டிநின்று கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாற்றுக்கட்சியினர் தேமுதிகவில் சேரும் நிகழ்ச்சியில் விஜயகாந்த் பேசுகையில்,
பதவி ஆசையை மனதில் கொண்டு இங்கு யாரும் வரக் கூடாது. மக்களுக்காகஉழைப்பவர்களுக்குத்தான் எங்களது கட்சியில் முக்கியத்துவம், மரியாதைவழங்கப்படும். ஆதாயம் பெறுவதற்காகவும், சுய விளம்பரத்திற்காகவும் இங்குவருகிறவர்களுக்கு கட்சியில் இடம் கிடையாது.
சட்டசபைத் தேர்தலில் நாம் கூட்டணி வைப்போம் என்றார்கள். ஆனால் தனித்துத்தான்நின்றோம். 28 லட்சம் ஓட்டுக்களை வாங்கி மற்ற கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்தோம்.
ஒவ்வொரு தொகுதியிலும் நமது வேட்பாளர்கள் முக்கிய வேட்பாளர்களுக்கு கடும்போட்டியைக் கொடுத்தனர். கணிசமான வாக்குகளை கொடுத்து மக்கள் நம்மைஅங்கீகரித்திருக்கிறார்கள்.
இனி வரும் தேர்தல்களில் முக்கிய இடம் வகிக்கும் அளவுக்கு நமது கட்சிவளர்ந்துள்ளது. தினசர ஆயிரக்கணக்கான பிற கட்சியினர் இங்கு வருதைப்பார்க்கும்போது கட்சி மீது மக்கள் வைத்துள்ள ஆழமான நம்பிக்கையை உணரமுடிகிறது.
இனி தமிழகத்தில் நடக்கும் தேர்தல்களில் தேமுதிக முக்கிய அங்கம் வகிக்கும் நிலைவர வேண்டும். அந்த அளவுக்கு உயர கட்சியை பலப்படுத்த வேண்டியது அவசியம்.விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ளது. இதிலும் கூட்டணி அமைக்கும் எண்ணம்இல்லை. தனித்து போட்டியிடவே விரும்புகிறோம்.
இதற்கு உங்களது ஒத்துழைப்பு முழுமையாக இருக்க வேண்டும். அப்போதுதான்வெற்றி இலக்கை எளிதில் எட்ட முடியும்.
எல்லாத் தொகுதிகளுக்கும் நான் வந்தால்தான் என்ற நிலை இருக்கக் கூடாது.அனைவரும் சும்மா இருக்காமல் உழைக்க வேண்டும் என்றார் விஜயகாந்த்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications