சங்கரராமன் வழக்கு: ஜூலை 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
சங்கரராமன் கொலை வழக்கு மீதான விசாரணை ஜூலை 19ம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டது.
பாண்டிச்சேரி தன்மை அமர்வு நீதிமன்றத்தில் சங்கரராமன் கொலை வழக்குவிசாரணையில் இருந்து வருகிறது. இந்த விசாரணையில் அரசு சார்பில் தமிழக அரசுவழக்கறிஞர் ஆஜராவதற்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் ஜெயேந்திரர் சார்பில்வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடைவிதித்து, மனு மீதான விசாரணையை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைத்தது.
இந்த நிலையில் இன்று மீண்டும் பாண்டிச்சேரி நீதிமன்றத்தில் சங்கரராமன் கொலைவழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 5பேர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
உச்சநீதிமன்ற இடைக்காலத் தடையைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையைஜூலை 19ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சின்னப்பாண்டி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications