பெட்ரோல் விலை உயர்வு: விஜயகாந்த் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பெட்ரோல், டீசல் விலையை மத்தியஅரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்என்று தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலையைமத்திய அரசு கடுமையாக உயர்த்தியிருப்பது கடுமையாக கண்டித்தக்கது.இந்த விலை உயர்வு மிகுந்த வேதனை தருகிறது. ஏழை, எளிய, நடுத்தர வகுப்புமக்கள் இந்த விலை உயர்வினால் கடுமையாக பாதிக்கப்படுவர்.
தேர்தல் முடியும் வரை காத்திருந்து விட்டு இப்போது உயர்த்தியுள்ளதைப்பார்க்கும்போது திட்டமிட்டு அவர்கள் செயல்பட்டிருப்பது தெரிய வருகிறது.
இந்த விலை உயர்வு மோசடியானது, மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகும்.பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வருகிறகாய்கறிகள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் விலை கடுமையாக உயரும்ஆபத்து உள்ளது.
உடனடியாக இந்த விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றுகோரியுள்ளார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications