சென்னை விமான நிலையம் தனியார் வசமாகிறது?மதுரை-கோவை விமான நிலையங்கள் தரம் உயர்வு
டெல்லி:
டெல்லி, மும்பையைத் தொடர்ந்து கொல்கத்தா மற்றும் சென்னை விமானநிலையங்களின் பராமரிப்பையும் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசுமுடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக இன்னும் 3 மாதங்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என மத்தியசிவில் விமானத்துறை இணையமைச்சர் பிரபுல் படேல் கூறியுள்ளார்.டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களின் பராமரிப்பு சமீபத்தில் தனியார்மயமாக்கப்பட்டது. இதற்கு விமான நிலைய ஊழியர்களிடையே கடும் எதிர்ப்புகிளம்பியது. விமான நிலைய ஊழியர்கள் நாடு முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்ததால், விமான போக்குவரத்தும் கடுமையாகபாதிக்கப்பட்டது.
இந் நிலையில் சென்னை மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களின் பராமிப்பையும்தனியாரிடமே ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக இன்று விமான நிலையங்களில் அடிப்படை வசதிகள் மேம்பாடுதொடர்பான அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.
பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் அவரது தலைமையில் நடந்த இக்கூட்டத்தில்அமைச்சர்கள் பிரபுல் படேல், தயாநிதி மாறன், திட்டக் குழுத் துணைத் தலைவர்மாண்டேக் சிங் அலுவாலியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரபுல் படேல்,
சென்னை, கொல்கத்தா விமான நிலையங்களை நவீனமயமாக்க பிரதமர் தலைமையில்குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் குழு 3 மாதங்களில்நவீனமயமாக்கல் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும்.
இதேபோல மதுரை, கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட நாடு முழுவதிலும் உள்ள 35விமான நிலையங்களையும் ரூ. 8,000 கோடி மதிப்பில் மேம்படுத்தவும் திட்டம்தீட்டப்படடுள்ளது.
இந்தத் திட்டம் 2008ம் ஆண்டுக்குள் நிறைவேற்றி முடிக்கப்படும் என்றார்.