இராக்-அமெரிக்க விமான தாக்குதல்-சர்காவி பலி
Subscribe to Oneindia Tamil
பாக்தாத்:
சதாம் ஹீசேன் அரசு கவிழ்கப்பட்ட பிறகு இராக்கில் அமெரிக்கப் படைகளுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்திவந்த அல்-கொய்தாவின் தலைவன் அபு முசாப் அல்-சர்காவி அமெரிக்க விமானத் தாக்குதலில் இன்றுகொல்லப்பட்டான்.
![]() |
பல்வேறு அமெரிக்கர்கள், ஐரோப்பியர்களை தலையை வெட்டிக் கொன்று அதை வீடியோவில் வெளியிட்டு வந்தசர்காவியின் போராளிகள் அமெரிக்கப் படைகளுக்கு எதிராக மிக பயங்கரமான போராட்டம் நடத்தி வந்தனர்.இவனது படையினர் நடத்தியது பெரும்பாலும் தற்கொலைத் தாக்குதல்களே. இதில் நூற்றுக்கணக்கானஅமெரிக்க-பிரிட்டிஷ் படையினரும், அப்பாவி பொது மக்களும் பலியாகியுள்ளனர்.இந் நிலையில் இராக்கின் தியாலா மாகாணத்தில் நேற்று மாலை அமெரிக்க விமானங்கள் நடத்திய குண்டு வீச்சுத்தாக்குதலில் சர்காவியும் அவனது போராளிகள் 7 பேரும் பலியாகிவிட்டனர். இத் தகவலை இராக் பிரதமர் நூரிஅல் மாலிகி இன்று தெரிவித்தார்.அல் சர்காவி பலியாகிவிட்டதை அல்-கொய்தாவும் உறுதி செய்துள்ளது. அதே நேரத்தில் தங்களது புனிதப் போர்தொடரும் என்றும் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இராக்கில் அல் கொய்தாவின் துணைத் தலைவனான அபுஅப்துல் ரஹ்மான் அல்-இராக்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்,













Click it and Unblock the Notifications