For Quick Alerts
For Daily Alerts
Just In
இராக்-அமெரிக்க விமான தாக்குதல்-சர்காவி பலி
பாக்தாத்:
சதாம் ஹீசேன் அரசு கவிழ்கப்பட்ட பிறகு இராக்கில் அமெரிக்கப் படைகளுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்திவந்த அல்-கொய்தாவின் தலைவன் அபு முசாப் அல்-சர்காவி அமெரிக்க விமானத் தாக்குதலில் இன்றுகொல்லப்பட்டான்.
பல்வேறு அமெரிக்கர்கள், ஐரோப்பியர்களை தலையை வெட்டிக் கொன்று அதை வீடியோவில் வெளியிட்டு வந்தசர்காவியின் போராளிகள் அமெரிக்கப் படைகளுக்கு எதிராக மிக பயங்கரமான போராட்டம் நடத்தி வந்தனர்.இவனது படையினர் நடத்தியது பெரும்பாலும் தற்கொலைத் தாக்குதல்களே. இதில் நூற்றுக்கணக்கானஅமெரிக்க-பிரிட்டிஷ் படையினரும், அப்பாவி பொது மக்களும் பலியாகியுள்ளனர்.இந் நிலையில் இராக்கின் தியாலா மாகாணத்தில் நேற்று மாலை அமெரிக்க விமானங்கள் நடத்திய குண்டு வீச்சுத்தாக்குதலில் சர்காவியும் அவனது போராளிகள் 7 பேரும் பலியாகிவிட்டனர். இத் தகவலை இராக் பிரதமர் நூரிஅல் மாலிகி இன்று தெரிவித்தார்.அல் சர்காவி பலியாகிவிட்டதை அல்-கொய்தாவும் உறுதி செய்துள்ளது. அதே நேரத்தில் தங்களது புனிதப் போர்தொடரும் என்றும் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இராக்கில் அல் கொய்தாவின் துணைத் தலைவனான அபுஅப்துல் ரஹ்மான் அல்-இராக்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
Comments
Story first published: Thursday, June 8, 2006, 5:30 [IST]