ஜெ. தலைமையில் சென்னையில் அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னை:
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து வருகிற 12ம் தேதி அதிமுக கூட்டணிநடத்தவுள்ள மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் சென்னையில் நடைபெறும்போராட்டத்திற்கு ஜெயலலிதா தலைமை தாங்குகிறார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கடுமையாக கண்டித்துள்ள ஜெயலலிதா, வருகிற12ம் தேதி மாவட்டந்தோறும், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு அதிமுக மற்றும்கூட்டணிக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் டத்தப்படும் என அறிவித்திருந்தார்.இந் நிலையில் யார் தலைமையில் போராட்டம் நடைபெறவுள்ளது என்ற பட்டியலைஅதிமுக தலைமைக் கழகம் தற்போது வெளியிட்டுள்ளது.
சென்னை சென்டிரல் ரயில் நிலையம் அருகே உள்ள மெமோரியல் ஹால் பகுதியில்நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு ஜெயலலிதா தலைமை தாங்குகிறார்.
ஜெயலலிதாவுடன், வைகோ, தொல். திருமாவளவன், ஜி.காளன், பஷீர் அகமது,தாவூத் மியாகான், ஸ்ரீதர் வாண்டையார் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின்தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
மதுரையில் நடைபெறும் போராட்டத்தில் காளிமுத்துவும், தேனியில் ஓ.பன்னீர்செல்வம், கேரளாவில் நடைபெறும் போராட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசனும்,நாமக்கல்லில் சுலோச்சனா சம்பத்தும், மகாராஷ்டிராவில் ஓ.எஸ்.மணியனும்,திருவள்ளூரில் விசாலாட்சி நெடுஞ்செழியனும் போராட்டத்திற்குத் தலைமைதாங்குகிறார்கள்.
ஈரோட்டில் கே.ஏ.செங்கோட்டையனும், கிருஷ்ணகிரியில் தம்பித்துரையும்,காஞ்சிபுரத்தில் வளர்மதியும், பெங்களூரில் விஜயலட்சுமி பழனிச்சாமியும்,புதுவையில் மதுசூதனனும் போராட்டத்திற்குத் தலைமை தாங்குகிறார்கள்.
விருதுநகரில் தினகரன், வேலூரில் கோகுல இந்திரா, கரூரில் எஸ்.எஸ்.சந்திரன்ஆகியோர் போராட்டத்திற்குத் தலைமை தாங்குகின்றனர்.












Click it and Unblock the Notifications