சென்னை அருகே மோட்டோரோலா செல்போன் தொழிற்சாலை!
சென்னை:
சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் ரூ. 135 கோடி மதிப்பீட்டில் மோட்டோரோலாசெல்போன் தொழிற்சாலை அமையவுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில், தமிழக அரசும்,மோட்டோரோலா நிறுவன அதிகாரிகளும் கையெழுத்திட்டுள்ளனர்.
அமெரிக்காவின் மோட்டோரோலா நிறுவனம் சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில்செல்போன் தயாரிப்புப் பிரிவை தொடங்க முயற்சித்தது.தமிழக அரசுடன் இணைந்து இந்த நிறுவனத்தை அது தொடங்குகிறது.இதுதொடர்பான ஒப்பந்தம் சென்னை தலைமைச் செயலகத்தில் கையெழுத்தானது.
முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் முன்னிலையில்,இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழக அரசின் சார்பில் தொழில்துறை செயலாளர்சக்தி காந்த தாஸ், மோட்டோரோலா நிறுவனம் சார்பில் அதன் இந்திய தலைவர்ஃபிரோஸ் வாண்டர்வாலா மற்றும் நிறுவனத்தின் அமெரிக்க கிளை செயல் துணைத்தலைவர் ஸ்டூவர்ட் ரீட் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்தத் திட்டத்தின் படி ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் 2லட்சத்து50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் செல்போன் தொழிற்சாலை அமைக்கப்படுகிறது.
ஆரம்ப கட்ட முதலீடு ரூ. 135 கோடி ஆகும். படிப்படியாக இது ரூ. 475 கோடியாகஅதிகரிக்கப்படும். இந்தத் தொழிற்சாலை மூலம் நேரடியாக 7250 பேருக்குவேலைவாய்ப்பு கிடைக்கும்.
இங்கு செல்போன்கள் தயாரிப்பு மேற்கொள்ளப்படுவதால் தமிழகத்தில் குறைந்தவிலையில் மோட்டோரோலா செல்போன்கள் கிடைக்கக் கூடிய வாய்ப்புகள்இருப்பதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.