சுவரேறி குதித்து ஒடிய மணமகன்- தர்ம அடி கொடுத்து இழுத்து வந்த பெண் வீட்டார்
தர்மபுரி:
தாலி கட்டும் நேரத்தில் ஓட்டம் பிடித்த மாப்பிள்ளையை குண்டுகட்டாக தூக்கி வந்து தர்ம அடி கொடுத்தனர்பெண் வீட்டார்.
![]() |
இவர்களது திருமணம் தர்மபுரியில் நடத்த ஏற்படுகள் செய்யப்பட்டன. மாப்பிள்ளையும், அவர் வீட்டாரும் நேற்றுமுன்தினம் இரவே தர்மபுரி வந்தனர். காலை திருமண ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்தது.
குளிக்க சென்ற மணமகன் நீண்ட நேரமாகியும் வரவில்லை. முகூர்த்த நேரம் நெருங்கியதால். மணமகள் வீட்டார்பதற்றம் அடைந்தனர். குளியல் அறைக்கு சென்று பார்த்த போது மணமகன் சுவர் ஏறி குதித்து அவர் தப்பிஓடிவிட்டார் என தெரியவந்தது.
இதனால் மணமகள் வீட்டார் ஆளுக்கொரு பக்கமாக தேடினர். தர்மபுரி நீதிமன்றம் அருகே சோமசேகர் சென்றுகொண்டிருந்தார். அவரை பெண் வீட்டார் குண்டுக்கட்டாக மண்டபத்துக்கு தூக்கி வந்தனர். அப்போது தனக்குதிருமணம் வேண்டாம் என அவர் வழியில் அடம் பிடித்தார். இதையடுத்து மணமகள் வீட்டார் அவருக்கு தர்மஅடி கொடுத்து மண்டபத்துக்கு தூக்கி வந்தனர்.
பின்பு அவரை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் சோமசேகர் திருமணம் வேண்டாம் என்று பிடிவாதமாககூறினார்.
![]() |
சோமசேகர் தந்தை ராக்கயப்பன் கூறுகையில், திருமணத்தை பெரியோர்கள் சேர்ந்து பேசி முடிவு செய்தோம்.திருமணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பு தான் சோமசேகருக்கு தகவல் தெரிவித்தோம். அன்று முதல் தனக்குதிருமணம் வேண்டாம் என கூறினான். எங்கள் பேச்சை தட்ட மாட்டான் என்ற நம்பிக்கையில் திருமணஏற்பாடுகளை செய்தோம் என்றார்.
இதை அனைத்தையும் பார்த்த மணமகள் வசந்தி, சோமசேதர் மனநோயாளி போல் தெரிகிறார். அவருடன்சேர்ந்து வாழ்ந்தால் எனக்கு நிம்மதி இருக்காது. எனக்கு இந்த திருமணம் வேண்டாம் என்று மாலையை கழற்றிவிட்டார். மணமகள் முடிவை பெரியோர்கள் ஏற்று திருமணத்தை நிறுத்தி விட்டனர்.














Click it and Unblock the Notifications