எம்.சி.ஏ-தனியார் சுயநிதி கல்லூரிகள் நுழைவுத் தேர்வுக்கு அனுமதி
சென்னை:
தனியார் சுய நிதிக் கல்லூரிகளில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ. படிப்புகளுக்கு நிர்வாகஒதுக்கீட்டின் கீழ் வரும் இடங்களுக்கு அந்தக் கல்லூரிகளே நுழைவுத் தேர்வைநடத்திக் கொள்ள நீதிபதி சுப்பிரமணி கமிட்டி அனுமதி அளித்துள்ளது.
ஓய்வு பெற்ற நீதிபதி சுப்பிரமணி தலைமையிலான ஒரு நபர் கமிட்டியின்அலுவலகத்தல் இன்று நடந்த கூட்டத்தில் தமிழக அரசின் உயர் கல்வித்துறைசெயலாளர் கணேசன், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன்,தனியார் சுயநிதிக் கல்லூரிகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.கூட்டத்திற்குப் பின்னர் நீதிபதி சுப்பிரமணி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் வரும் காலியிடங்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்த அனுமதிஅளிக்கப்படுகிறது.
பொறியியல் பட்டப் படிப்புகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் வரும் இடங்களை எப்படிநிரப்புவது என்பது குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதால் இதற்குவிண்ணப்பிக்க வேண்டிய கால அவகாசம் அடுத்த மாதம் 4ம் தேதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கையில் ஒற்றைச் சாளர முறை தொடரும். மருத்துவப் படிப்புக்கானநிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் வரும் இடங்களை நிரப்புவது தொடர்பாக நாளைஆலோசனைக் கூடடம் நடைபெறவுள்ளது என்றார்.
இந்த நுழைவுத் தேர்வை ஜேப்பியார் தலைமையிலான தமிழ்நாடு தனியார் சுய நிதி பொறியியல், மருத்துவ மற்றும் கல்லூரிகள்கூட்டமைப்பு நடத்தவும் சுப்பிரமணி கமிட்டி அனுமதி அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications