குற்றலாத்தில் ஆட்டோ டிரைவர்கள் மீது அழகிரியின் மகன், நண்பர்கள் தாக்குதல்?

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

முதல்வர் கருணாநிதியின் பேரனும் (அழகிரியின் மகன்) அவரது நண்பர்களும் தங்களைத் தாக்கியதாக குற்றாலம்ஆட்டோ டிரைவர்கள் இருவர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அழகிரியின் மகன் தனது நண்பர்களுடன் குற்றாலத்திற்கு காரில் சென்றுள்ளார். குற்றாலம் பஸ் ஸ்டாண்டில்ஆட்டோ டிரைவர்களுக்கும் அழகிரியின் மகனுடன் வந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அழகிரியின் மகனும் அவரது நண்பர்களும் ஆட்டோ டிரைவர்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த ஆட்டோ டிரைவர் முருகன், ஈஸ்வரன் ஆகியோர் இச் சம்பவம் குறித்து போலீசில் புகார்கொடுத்தும் அவர்கள் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று தெரிகிறது.

இது குறித்து ஆட்டோ டிரைவர் முருகன் கூறுகையில்,

இரவு 11.30 மணிக்கு பஸ் ஸ்டாண்டில் எனது ஆட்டோவை கழுவிக் கொண்டிருந்தேன். அப்போது மாருதி கார்வந்தது. அதில் இருந்தவர்கள் குடிபோதையில் இருந்தனர். போதையில் அவர்கள் காரில் வாந்தி எடுத்திருந்ததால்அதனை கழுவ நான் கழுவிக் கொண்டிருந்த தண்ணீர் பம்பு அருகே வந்தனர்.

நான் பயன்படுத்திய பிளாஸ்டிக் குடத்தை கார் கழுவ கேட்டனர். நானும் கொடுத்தேன். காரை கழுவிய பிறகுகுடத்தை திருப்பி தராமல் தண்ணீரோடு தூக்கிப்போட்டு விளையாடினர். கடைசியில் குடத்தை கீழே போட்டு

இதையடுத்து எனக்கும் அவர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அப்போது இவர் யார் தெரியுமா?.அழகிரியின் மகன் என்று காரில் இருந்தவரைக் காட்டிக் கூறியதோடு என்னை தாக்கிவிட்டுச் சென்றனர்.

சிறிது நேரத்தில் குற்றாலம் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகச்சாமி, ஏட்டையா மாரியப்பன் ஆகியோர் அங்குவந்தனர். போலீசார் எனது கைகளை பிடித்துக் கொள்ள அழகிரியின் மகனும் அவரது நண்பர்களும் என்னைகடுமையாகத் தாக்கினர்.

அப்போது எனக்கு ஆதரவாக பேசிய ஆட்டோ டிரைவர் ஈஸ்வரனையும் தாக்கினர்.

பின்னர் எங்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிச்சென்றனர். அங்கு நாங்கள் கொடுத்த புகாரை வாங்காமல்,இனிமேல் நாங்கள் மேற்கொண்டு இந்த விஷயத்தில் புகார் கொடுக்க மாட்டோம் என எழுதி கையெழுத்துவாங்கினர்.

அதற்கு பிறகு நாங்கள் இருவரும் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்ந்தோம். அங்கு வந்த போலீசார்எங்களிடம் பிரச்னையை இத்தோடு விட்டுவிடுமாறும் மேற்கொண்டு யாரிடமும் சொல்ல கூடாது என கூறினர்.

இந்தச் சம்பவம் குறித்து எஸ்.பி. சோமானி கூறுகையில், குற்றாலத்தில் இரவில் ஆட்டோ டிரைவர்களுக்கும் நான்குநபர்களுக்கும் இடையே தகராறு நடந்துள்ளது உண்மைதான். அதில் போலீசார் சமாதானம் செய்துள்ளனர்.ஆனால் அதில் மு.க.அழகிரியின் மகன் இருந்தாரா என்பது தெரியவில்லை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+