டீசல் விலை: 13ம் தேதி லாரிகள் ஸ்டிரைக்: கேஸ், காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும்
நாமக்கல்:
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் 13ம் தேதி (செவ்வாய் கிழமை) காலை6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை 1.5 லட்சம் லாரிகள் ஒடாது என தமிழக லாரி அதிபர்கள் சம்மேளனத்தின் தலைவர்செங்கோடன் தெரிவித்துள்ளார்.
இதனால் காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயரவும், தட்டுப்பாடு ஏற்படவும்வாய்ப்புள்ளது.பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதை எதிர்த்து பல்வேறு கட்சிகள், அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
வரும் 12ம் தேதி அதிமுக கூட்டணி சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடக்கிறது.சென்னையில் நடைபெறும் போராட்டத்திற்கு ஜெயலலிதா தலைமை தாங்குகிறார்.
இந் நிலையில் தமிழ்நாட்டில் வரும் 13ம் தேதி லாரிகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன. காலை 6 மணி முதல் மறுநாள்காலை 6 மணி வரை 1.5 லட்ச லாரிகள் ஸ்டிரைக்கில் பங்கேற்கின்றன. சரக்கு லாரிகள் தவிர பெட்ரோல், டீசல் மற்றும் சமையல்காஸ் ஏற்றிச் செல்லும் லாரிகளும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்கின்றன.
தமிழகம் மட்டுமின்றி தென் மாநிலங்கள் அனைத்திலும் காஸ் ஏற்றிச் செல்லும் 4,000 லாரிகளும் வேலை நிறுத்தத்தில்ஈடுபடுகின்றன.
இது குறித்து மாநில லாரி அதிபர்கள் சம்மேளனத்தின் தலைவர் செங்கோடன் கூறுகையில்,
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நாங்கள் வாடகையை உயர்த்தினால் பொதுமக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவர். மேலும்லாரி தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. விலை உயர்வால் தொழில் முடங்கி அவர்களும் பாதிக்கபட்டுஉள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு இந்த விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும். மாநில அரசு விற்பனை வரியையும், மத்திய அரசுஇறக்குமதி வரியையும் குறைத்தாலே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தி விடலாம். இதை மத்திய, மாநிலஅரசுகள் செய்ய வேண்டும் என்றார்.
ஆனால், பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியைக் மாநில அரசு குறைக்காது என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications