விபச்சாரம்: கேரள பெண், கும்பல் பிடிபட்டது
சென்னை:
கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் வேலை தருவதாகக் கூறி இளம் கேரள பெண்ணை சென்னைக்கு அழைத்து வந்து விபசாரத்தில் தள்ளிய கும்பல் பிடிபட்டது.
செனாய் நகரில் பெரிபெரி சாலையில் உள்ள அபார்ட்மென்ட்டில் விபச்சாரம் நடப்பது குறித்து அறிந்த போலீசார் மாறு வேடத்தில் அங்கு சென்றனர்.அங்கிருந்த வீர துரைசிங் என்ற நபர், அண்ணா நகர் பிளாக்கில் போய் நின்று கொண்டு மொபைல் போனில் பேசுங்கள். உங்களை காரில் வரும் நபர்கள்அழைத்துச் செல்வார்கள். ஒரு நாளைக்கு கார் மற்றும் பெண்ணுக்கு 10,000 ரூபாய் செலவாகும் என்று கூறி அனுப்பினார்.
போலீசாரும் அப்படியே செய்தனர். இதையடுத்து அவர்களை ஒரு கும்பல் மாருதி வேனில் வந்து ஏற்றிச் சென்றது.
வாடிக்கையாளர்கள் போல விபசார வீட்டிற்குள் போலீசார் நுழைந்தனர். அங்கு ஜமால் என்ற புரோக்கரும் கேரளாவைச் சேர்ந்த ரூபிணி (20) என்றபெண்ணும் இருந்தனர். இதையடுத்து அந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர். வீரதுரைசிங்கும் கைத செய்யப்பட்டார்.
இது தொடர்பாக ரூபிணியிடம போலீசார் விசாரணை நடத்தியபோது,
சென்னையில் கார்மென்ட்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப் போவதாகவும் அதில் ரிசப்சனிஸ்ட் வேலை தருவதாகவும், மாதம் 6,000 ரூபாய் சம்பளம்தருவதாகவும் கூறி என்னை ஜமால் திருச்சூரில் இருந்து அனைத்து வந்தார்.
ஆனால், சென்னைக்கு வந்த பின் என்னை வலுக்கட்டாயமாக விபசாரத்தில் ஈடுபடுத்தினார் என்றார்.
இதையடுத்து, ரூபிணியை மைலாப்பூர் அரசு இல்லத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வேன் டிரைவர் சுரேஷ் குமாரும் கைது செய்யப்பட்டார். ஆகியோரை கைது செய்தனர். விபசாரத்திற்கு பயன்படுத்தி இரண்டு வேன்கள்,இரண்டு மொபைல் போன்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications