கொள்ளிடம் புதைமணலில் சிக்கி 4 சிறுவர்கள் சாவு
Subscribe to Oneindia Tamil
லால்குடி:
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கொள்ளிடம் ஆற்றுப் புதைமணலில் சிக்கி ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுவர்களும் ஒரு சிறுமியும் பரிதாபமாக இறந்தனர்.
லால்குடி அருகே உள்ள கீழந்தி என்ற ஊரைச் சேர்ந்த ஜோதி ஆனந்த், ஜீவா,மணிகண்டன் மற்றும் திரிபுரசுந்தரி ஆகியோர், கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச்சென்றனர்.ஆற்றை ஓட்டி ஏராளமான புதைமணல் பகுதிகள் இருப்பது தெரியாமல் இந்தசிறுவர்கள் அங்கு சென்று குளிக்க முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக 4பேரும் புதைமணலில் சிக்கிக் கொண்டனர்.
இதனால் மூச்சுத் திணறி நான்கு பேரும் பரிதாபமாக இறந்தனர்.
தகவல் அறிந்ததும் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தனர். மணல்வாரிஇயந்திரம் மூலம் நான்கு பேரின் சடலங்களும் மீட்கப்பட்டன.












Click it and Unblock the Notifications