உளவுப் பிரிவில் நாஞ்சில் குமரன்- மதுவிலக்கில் திலகவதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபியாக நாஞ்சில் குமரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 3 கூடுதல் டிஜிபிக்களின் பணியிடங்கள் நேற்று மாற்றிஅமைக்கப்பட்டன.அதன்படி சென்னை குற்ற வழக்குகள் இயக்குனராக இருந்து வந்த அர்ச்சனாராமசுந்தரம் சென்னை பொருளாதார குற்றப் பிரிவு இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்து வந்த நாஞ்சில் குமரன்,மாநில உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.
கடலோர பாதுகாப்புப் பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்து வந்த திலகவதி மதுவிலக்குஅமலாக்கப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
திலகவதியின் கணவர் தான் நாஞ்சில் குமரன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும்இருவரும் நெடுங் காலமாகவே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications