திமுகவினர் தலையீட்டால் அதிகாரிகள் கலக்கம்-ஓபி
Subscribe to Oneindia Tamil
கொடைக்கானல்:
அரசு நிர்வாகத்தில் திமுகவினர் தலையீடு அதிகம் இருப்பதால் அதிகாரிகள்கலக்கமடைந்துள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
கொடைக்கானலில் நடந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஒருமாதத்திற்குள்ளேயே அரசு அலுவலகங்களிலும், நிர்வாகத்திலும் திமுகவினரின்தலையீடு அதிகரித்துள்ளது.அவர்கள் சொல்வதைத்தான் அதிகாரிகள் கேட்க வேண்டும் என்று திமுகவினர்உத்தரவிடுகிறார்கள். அவர்கள் சொல்லித்தான் காவல்துறை அதிகாரிகள் மாற்றமும்நடக்கிறது.
இதனால் அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர். திமுகவினரின் இந்த செயல் மக்களுக்குநல்லதல்ல. மக்கள் எப்போதும் அதிமுக பக்கம்தான் உள்ளனர். மக்கள்பிரச்சினைக்காக நாங்கள் எப்போதும் குரல் கொடுப்போம் என்றார் பன்னீர் செல்வம்.












Click it and Unblock the Notifications