சிதம்பரத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்
சென்னை:
பங்குச் சந்தையில் ஏற்பட்ட பெரும சரிவுக்கு நிதியமைச்சர் ப.சிதம்பரம்தான் காரணம்என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சியின் பொதுச்செயலாளர் குருதாஸ் தாஸ் குப்தா கூறியுள்ளார்.
சென்னை வந்த குருதாஸ்தாஸ் குப்தா செய்தியாளர்களிடம் பேசுகையில்,மும்பை பங்குச் சந்தையில் ஏற்பட்ட பெரும் சரிவுக்கு ப.சிதம்பரம்தான்பொறுப்பேற்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஏற்கவே முடியாது. விலை ஏற்றத்தைத் தவிர்க்கும்வகையிலான மாற்றுத் திட்டங்களை நாங்கள் மத்திய அரசுக்குக் கொடுத்தும் அதைஅவர்கள் பரிசீலனை செய்யாமல் புறக்கணித்து விட்டார்கள்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகடுமையாக உயர்ந்து மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.
தேர்தலின்போது மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அக்கறைகாட்டாமல், பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளதுகண்டனத்துக்குரியது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து அடுத்த மாதம் நாடு தழுவிய மிகப்பெரிய போராட்டத்தை நடத்தவுள்ளோம். மழைக்காலக கூட்டத் தொடரின்போதும்நாடாளுமன்றம் முன்பு கூடி போராட்டம் நடத்துவோம் என்றார் குப்தா.