பொள்ளாச்சி தீ விபத்தில் பெண் பலி-சென்னை கோ-ஆப்டெக்ஸ் அலுவலகத்தில் தீ
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே நடந்த தீ விபத்தில் பெண் பலியானார்.
கோழிப்பண்ணை தோட்டம் என்ற இடத்தில் வசித்து வருபவர் ஜெயக்குமார். இவரதுவீட்டுக்கு அருகே உள்ள குடிசையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.இந்தத் தீ ஜெயக்குமாரின் குடிசைக்கும் பரவியது.
இதில் சிக்கி ஜெயக்குமாரின் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் 3குடிசைகள் எரிந்து சாம்பலாயின.
கோ-ஆப்டெக்ஸ் அலுவலகத்தில் தீ:
இதற்கிடையே சென்னை எழும்பூரில் உள்ள கோ ஆப்டெக்ஸ் தலைமைஅலுவலகத்தில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ளபொருட்கள் சேதமடைந்தன.
எழும்பூர் பாந்தியன் சாலையில் கோ ஆப்டெக்ஸ் தலைமை அலுவலகம்அமைந்துள்ள தில்லையாடி வள்ளியம்மை கட்ட வளாகம் உள்ளது. இதன் தரைத்தளம்,முதல், இரண்டாம் மற்றும் 3ம் தளங்களில் கோ ஆப்டெக்ஸ் அலுவலகம்அமைந்துள்ளது. தரைத் தளத்தில் விற்பனை மையம் அமைந்துள்ளது.
இந்த வளாகத்தின் 3வது மாடியில் செவ்வாய்க்கிழமை மாலை பெரும் தீவிபத்துஏற்பட்டது. இந்தத் தீ 4 மற்றும் 5வது தளங்களுக்கும் தீ பரவியது. இதில் பல லட்சம்மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. விலை மதிக்கத்தக்க பட்டு ஜவுளிகள் கீழ்த்தளங்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்ததால் அவை தீவிபத்திலிருந்து தப்பின.
தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.