18 ரூபாய்க்கு பெட்ரோல் தரலாம்: சு.சுவாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு நிர்ணயிக்கக் கூடாது, மாறாக பெட்ரோலியநிறுவனங்களே விலையை முடிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ஜனதாக் கட்சிதலைவர் சுப்ரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், என்னுடைய கணக்குப்படிபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 18.71தான் இருக்க வேண்டும். தற்போது உள்ளவிலை நிலவரம் மிகவும் அநியாயமானது.தற்போதைய விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.சர்வதேச எண்ணை நிறுவனங்களை இந்தியாவில் வியாபாரம் செய்ய அனுமதித்தால்விலை ஏற்றத்தை கணிசமாக குறைக்கலாம். சர்வதேச நிறுவனங்கள் இங்கே விற்பனைசெய்ய அனுமதிக்கப்பட்டால், பெட்ரோல் விலை ரூ. 20க்கு மேல் உயரவாய்ப்பில்லை.
தற்போது வரிகள் அனைத்தையும் சேர்த்த பின்னர் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.53 ஆக உள்ளது. பெட்ரோல் மீதான சுங்க வரி மற்றும் கலால் வரியைக் குறைத்தால்விலையை ரூ. 30 வரைக்கு குறைக்க முடியும் என்றார் சுவாமி.












Click it and Unblock the Notifications