அகதிகள் பிரச்சினை: ஆராய அமைச்சர்கள் குழு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலங்கை அகதிகள் முகாமில் நிலவும் குறைபாடுகள், அகதிகளுக்கான வசதிகள்குறித்து ஆராய அமைச்சர்கள் குழுவை மண்டபம் முகாமுக்கு அனுப்பி இருப்பதாகமுதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சட்டசபை உறுப்பினர் ரவிக்குமார்தெரிவித்த தகவலின் அடிப்படையில், வீட்டு வசதித்துறை அமைச்சர் சுப.தங்கவேலன், அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோரை இலங்கைஅகதிகள் முகாமுக்கு அனுப்பியுள்ளேன்.அவர்கள் முகாமை நேரில் பார்வையிட்டு இருப்பிடம், உணவு, உடை, மருத்துவ வசதிஉள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்தி எனக்குத் தகவல் தெரிவிப்பார்கள். அவர்கள்கொடுக்கின்ற விவரங்களை அறிந்து, அந்த அறிக்கையின் அடிப்படையில், மாநிலஅரசின் மூலமும், மத்திய அரசின் மூலமும் அவர்களுக்கு ஆவண செய்யப்படும்என்று தெரிவித்துள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications