ஐநா தலைவர் பதவியை குறி வைக்கும் இந்தியா
சிங்கப்பூர்:
கோபி அன்னான் ஓய்வு பெறவுள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் துணைப்பொதுச் செயலாளராக உள்ள சசி தரூரை, பொதுச் செயலாளர் தேர்தலில் நிறுத்தஇந்தியா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
ஐ.நா. சபையின் பொதுச் செயலாளராக உள்ள கோபி அன்னானின் பதவிக்காலம் இந்தஆண்டு இறுதியில் முடிவடைகிறது. இதையடுத்து அடுத்த பொதுச் செயலாளர் யார்என்ற ஆவல் உலகம் முழுவதும் எழுந்துள்ளது.இந்தத் தேர்தலில் தற்போதைய ஐ.நா சபையின் துணைப் பொதுச் செயலாளராக உள்ளசசி தரூரை வேட்பாளராக நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளதாக சிங்கப்பூரிலிருந்துவெளி வரும் ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
விரைவில் டெல்லியில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல்வெளியிடப்படும் எனவும் அந்த நிாளிதழ் தெரிவித்துள்ளது.
50 வயதாகும் தரூர், 1978ம் ஆண்டு ஐ.நா. சபையில் தனது பணியைத் தொடங்கினார்.தற்போது ஐ.நா. சபையின் பொது தகவல் பிரிவின் தலைவராக உள்ளார். இந்தியர்என்றாலும் கூட தரூர் லண்டனில் பிறந்தவர்.
இந்தியா மற்றும் அமெரிக்காவில் படிப்பை முடித்த தரூர், பல்வேறு நூல்களையும்எழுதியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் மன்மோகன் சிங், அதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் ஆகியோரை சந்தித்துதான் போட்டியிடுவதற்கு ஆதரவு கோரினார் தரூர்.
பிரதமர் உள்ளிட்ட தலைவர்களின் ஆதரவு கிடைத்ததைத் தொடர்ந்து தற்போது தரூர்பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடவுள்ளார்.
அடுத்த ஐ.நா. பொதுச் செயலாளர் ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும் என்று ஏற்கனவே சீனா கூறியுள்ள நிலையில், இந்தியாவின் இந்த முடிவுமுக்கியத்துவம் பெறுகிறது.
ஏற்கனவே, ஐ.நாவுக்கான இலங்கை தூதர் ஜெயந்தா தனபாலா, தென் கொரியவெளியுறவுத்துறை அமைச்சர் பான் கிமூன், தாய்லாந்து நாட்டு துணைப் பிரதமர்சுரக்கியார்ட் சதிரத்தாய் ஆகியோர் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட முடிவுசெய்துள்ளனர்.
ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் பதவியில் கடைசியாக மியான்மர் (முந்தையபர்மா) நாட்டின் யூ தாண்ட் 1961ம் ஆண்டு முதல் 1971 வரை பதவி வகித்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் ஆசிய நாடுகளைச் சேர்ந்த யாரும் அப்பதவிக்குதேர்வு செய்யப்படவில்லை.












Click it and Unblock the Notifications