பெரியாறு அணை: கருணாநிதிக்கு காங். எம்பி கோரிக்கை
சென்னை:
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 152 அடியாக உயர்த்த உடனடிநடவடிக்கையை முதல்வர் கருணாநிதி மேற்கொள்ள வேண்டும் என்று பெரியகுளம்காங்கிரஸ் எம்.பி. ஹாரூண் ரஷீத் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்றுஉச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் அந்த உத்தரவை செல்லாததாக்கும்வகையில் கேரள மாநல சட்டசபையில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இனிமேலும் இந்த பிரச்சினையில் தமிழக அரசு அமைதி காக்கக் கூடாது. அணையின்ஒரிஜினல் அளவான 152 அடிக்கு உயரத்தை அதிகரிக்க தமிழக அரசு உடனடியாகநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அது ஒன்றுதான் பெரியாறு பாசனப் பகுதி விவசாயிகளுக்கு நலன் பயப்பதாகஅமையும்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக கடந்த ஏப்ரல் 28ம் தேதி நான் நாடாளுமன்றத்தில்பேசியுள்ளேன். இந்தப் பிரச்சினை குறித்து கேரள அரசுடன் தமிழக அரசுஆக்கப்பூர்வமான பேச்சுவார்ததையை உடனடிாயக தொடங்க வேண்டும் என்றுகூறியுள்ளார் ஹாரூண்.












Click it and Unblock the Notifications