பி.இ படிப்பில் சேர 65,000 பேர் விண்ணப்பம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொறியியல் படிப்புகளில் சேர தமிழகம் முழுவதும் 65,000 மாணவ, மாணவியர்விண்ணப்பித்துள்ளனர். இதற்கான கவுன்சிலிங் ஜூலை 10ம் தேதி தொடங்கவுள்ளது.
அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள்,அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் சுய நிதிக் கல்லூரிகளில் அரசுஒதுக்கீட்டின் கீழ் வரும் இடங்களில் பி.இ. படிப்புகளில் சேர கடந்த 2ம் தேதி முதல்விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வந்தன.விண்ணப்பத்தைப் பெற்றுப் பூர்த்தி செய்து கொடுக்க நேற்றுதான் கடைசி நாள்.இதையடுத்து நேற்று விண்ணப்பங்களைக் கொடுக்க மாணவர் கூட்டம் அலைமோதியது. நேற்று ஒரே நாளில் மட்டும் 8500 மாணவ, மாணவியர் விண்ணப்பங்கள்கொடுத்தனர்.
கெடு முடிவடைந்த பிறகு மொத்தம் 65,000 மாணவ, மாணவியர்விண்ணப்பித்துள்ளனர். மாணவர்களுக்கான ரேங்க் பட்டியல் ஜூலை 1ம் தேதிவெளியிடப்படுகிறது. ஜூலை 10ம் தேதி கவுன்சிலிங் தொடங்குகிறது. அதற்குமுன்னதாக ஜூலை 6ம் தேதி மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங் தொடங்கவுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களைக் கொடுப்பதற்கான கடைசித் தேதி வருகிற 19ம்தேதியாகும்.












Click it and Unblock the Notifications