மதானிக்கு சிறையிலேயே சிகிச்சை?
கோவை:
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள மக்கள் கட்சித் தலைவர்அப்துல் நாசர் மதானிக்கு, சிறையிலேயே சிகிச்சை அளிப்பதற்கான வசதி இருக்கிறதாஎன்று கேட்டு கோவை சிறை நிர்வாகத்திற்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
கோவை தொடர் வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்தில் கைதாகி கோவை மத்தியசிறையில் மதானி அடைக்கப்பட்டுள்ளார். செயற்கைக் காலுடன் உள்ள அவருக்குசர்க்கரை வியாதி, இதயக் கோளாறு, முதுகு வலி உள்ளிட்ட உபாதைகள் உள்ளன.சமீபத்தில் சென்னைக்கு வந்த கேரள முதல்வர் அச்சுதானந்தன், மதானிக்கு சிறந்தமுறையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும், மனிதாபிமானஅடிப்படையில் அவரை ஜாமீனில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை விடுத்தார்.
மருத்துவ சிகிச்சை தர தமிழக அரசு ஏற்பாடு செய்யும். ஜாமீனில் விடுவிப்பதுதொடர்பான நடவடிக்கைகளை நீங்கள் நீதிமன்றம் மூலம் பார்த்துக் கொள்ளுங்கள்என்று அவரிடம் கருணாநிதி கூறிவிட்டார்.
இந்த நிலையில், கோவை சிறைத்துறை டிஐஜி முனிவேல், மாநகர காவல்துறைஆணையர் கரண் சின்ஹா ஆகியோருக்கு தமிழக அரசு ஒரு கடிதம் எழுதியுள்ளது.அதில், மதானிக்கு கோவை சிறை மருத்துவமனையிலேயே மருத்துவ சிகிச்சை தரமுடியுமா? அதற்கான வசதி உள்ளதா? அப்படி இருந்தால் அதற்குரிய வார்டைசுத்தப்படுத்தி சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்ய முடியுமா என்று தமிழக அரசுகேட்டுள்ளது.
இந்த கடிதம் தொடர்பாக கோவை அரசு மருத்துவமனை டாக்டர்களுடன் சிறைமருத்துவர்களும், அதிகாரிகளும் ஆலோசனை நடத்தியுள்ளனர். ஓரிரு நாட்களில்இதுதொடர்பாக அரசுக்குக் கடிதம் அனுப்பப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications