கோவை மருத்துவமனையில் மதானிக்கு சிகிச்சை?
கோவை:
கோவை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதானிக்கு அரசுமருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபடவுள்ளது.
கோவை தொடர் வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்தில் கைதாகி கோவை மத்திய சிறையில் மதானிஅடைக்கப்பட்டுள்ளார். செயற்கைக் காலுடன் உள்ள அவருக்கு சர்க்கரை வியாதி, இதயக் கோளாறு, முதுகு வலிஉள்ளிட்ட உபாதைகள் உள்ளன.சமீபத்தில் சென்னைக்கு வந்த கேரள முதல்வர் அச்சுதானந்தன், மதானிக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கஏற்பாடு செய்ய வேண்டும், மனிதாபிமான அடிப்படையில் அவரை ஜாமீனில் விடுதலை செய்ய நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை விடுத்தார்.
மருத்துவ சிகிச்சை தர தமிழக அரசு ஏற்பாடு செய்யும். ஜாமீனில் விடுவிப்பது தொடர்பான நடவடிக்கைகளைநீங்கள் நீதிமன்றம் மூலம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அவரிடம் கருணாநிதி கூறிவிட்டார்.
இந்த நிலையில், கோவை சிறைத்துறை டிஐஜி முனிவேல், மாநகர காவல்துறை ஆணையர் கரண் சின்ஹாஆகியோருக்கு தமிழக அரசு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில், மதானிக்கு கோவை சிறை மருத்துவமனையில்சிகிச்சை தர போதுமான வசதிகள் உள்ளனவா என்றும் கேட்டறியப்பட்டது.
இதுபற்றி விவாதிக்க நேற்று ஜஜி.சுப்பிரமணியம், கமிஷனர் கரன்சின்ஹா, சிறைத்துறை டிஜஜி.முனிவேல மற்றும்அதிகாரிகள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஜெயிலில் டிஜஜி முனிவேல், எஸ்பி ராஜேந்திரன்ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் இயக்குநர் கலாநிதி, ஆர்எம்ஓ அங்குசாமி ஆகியோரிடம்ஆலோசனை நடத்தினார்கள்.
அரசு மருத்துவமனையில் சிறை கைதிகளுக்கு சிகிச்சை அளிக்கும் கான்விட் வார்டை அவர்கள் சுற்றிப்பார்த்தனர்.போதுமான பாதுகாப்புகள் உள்ளனவா என்றும் பார்வையட்டனர். இதற்கான விவரத்தை அரசு சிறை நிர்வாகம்அறிக்கை அனுபிப வைத்தது.
தமிழக அரசு உத்தரவுக்கு பின் மதானிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து முடிவு செய்யப்படும்.












Click it and Unblock the Notifications