வாபஸாகும் சிலை உடைப்பு வழக்குகள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில் சுவாமி சிலைகளை உடைத்தது தொடர்பாகபதிவான வழக்குகளை வாபஸ் பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தின் சில பகுதிகளில் விநாயகர் சிலை உள்ளிட்டகோவில் சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டது தொடர்பாக 64 வழக்குகளை போலீஸார்பதிவு செய்தனர். இந்த வழக்குகள் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர்.வழக்குகள் அனைத்தும் இன்னும் நிலுவையில் உள்ளன.
இந்த வழக்ககுளை தற்போது வாபஸ் பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களுக்கு அரசின் முடிவைத் தெரிவித்துதகவல் அனுப்பப்பட்டுள்ளன. இவற்றை நீதிமன்றங்கள் பரிசீலித்து வழக்கைதள்ளுபடி செய்யும்.












Click it and Unblock the Notifications