ஆசிரியர்கள் இடமாற்றம்: அரசுக்கு கிறிஸ்தவ அமைப்பு எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவ சிறுபான்மை அமைப்புகள் நடத்தும் பள்ளிகளைச்சேர்ந்த 116 ஆசிரியர்களை பொய்யான காரணங்களைக் கூறிவெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்துள்ளதை திரும்பப் பெறாவிட்டால்போராட்டம் நடத்தப் போவதாக தென்னிந்திய கிறிஸ்தவ சபையின் தூத்துக்குடிமாவட்டக் கிளை எச்சரித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கீழநாலுமாவடி என்ற இடத்தில் அரசு உதவி பெற்று இயங்கிவரும் கிறிஸ்தவ பள்ளியில் கடந்த ஆண்டு 5 மாணவர்களே சேர்ந்ததாகவும், ஆனால்ஏராளமான மாணவர்கள் இருப்பதாக கணக்கு காட்டி அப்பள்ளியின் ஆசிரியைஹெலன் சம்பளம் பெற்று வந்ததாகவும் சமீபத்தில் புகார் எழுந்தது.

இதையடுத்து அங்கு சோதனை நடத்திய கல்வித்துறை அதிகாரிகள் ஹெலனை வேறுமாவட்டத்திற்கு இடமாற்றம் செய்தனர்.

அந்தப் பள்ளியையும் மூட நடவடிக்கை எடுத்தனர். இதேபோல மாவட்டம் முழுவதும்சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளைச் சேர்ந்த 116 ஆசிரியர், ஆசிரியைகளைகல்வித்துறை அதிகாரிகள் வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்துள்ளனர்.

இதற்கு தென்னிந்திய கிறிஸ்தவ திருச்சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவர்பாதிரியார் ஜெபச்சந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசின் நடவடிக்கைஉள்நோக்கம் கொண்டதாக உள்ளது.

வேண்டும் என்றே பொய்யான காரணங்களைக் கூறி ஆசிரியர், ஆசிரியைகளைஇடமாற்றம் செய்துள்ளனர். இந்த உத்தரவுகளை உடனடியாக திரும்பப் பெறவேண்டும். இல்லாவிட்டால் மிகப் பெரிய போராட்டத்தில் நாங்கள் ஈடுபடுவோம்என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+