தொடர்ந்து வெயிலில் வறுபடும் சென்னை!
சென்னை:
அக்னி நட்சத்திரம் முடிவடைந்தும் கூட சென்னை மாநகரில் தொடர்ந்து கடும் வெயில்நிலவி வருவதால் மக்கள் மண்டை காய்ந்து போயுள்ளனர்.
கத்திரி வெயில் காலம் கடந்த மே மாதத்துடன் முடிவடைந்தது. இருப்பினும்தொடர்ந்து சென்னையில் வெயில் வாட்டி வருகிறது. இடையில் ஓரிரு நாட்களுக்குலேசான மழை பெய்தது. ஆனால் இப்போது மழையும் இல்லை, காற்றும் இல்லை.மாறாக கடும் வெப்பம் நிலவி வருகிறது.தொடர்ந்து வெயில் கொளுத்துவதற்கு தென் மேற்கு பருவ மழை வலுப்பெறாமல்இருப்பதுதான் முக்கிய காரணம் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம்தெரிவித்துள்ளது.
தென் மேற்கு பருவ மழை தற்போது கேரளாவிலும், கர்நாடகத்திலும் பலவீனமாகஉள்ளது. இதன் காரணமாகவே சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலானபகுதிகளிலும் வெயில் அதிகமாக உள்ளது.
கடந்த பத்து நாட்களாகவே சென்னை நகரில் 100 டிகிரியை ஒட்டி வெயில் அடித்துவருகிறது. வெயில் குறைவதற்கான அறிகுறிகயும் இல்லை.
இந்க கடும் வெயில் இன்னும் சில நிாட்களுக்கு நீடிக்கும் என்று தெரிகிறது.
தற்போது கேரளா மற்றும் வட கர்நாடகத்தில் தென் மேற்குப் பருவ மழை மீண்டும்பெய்யத் தொடங்கியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இது வலுப்பெறும் என்றுதெரிகிறது.
அப்போது தான் சென்னையில் நிலவி வரும் கடும் வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலைஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications