மீண்டும் ஆளுனராக பதவியேற்றார் பர்னாலா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக ஆளுனராக மீண்டும் எஸ்.எஸ்.பர்னாலா இன்று மாலை பதவியேற்றுக்கொண்டார்.
தமிழக ஆளுனராக இரண்டாவது முறையாக பதவி வகித்து வரும் பர்னாலாவின்பதவிக்காலம் மேலும் ஒரு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த ஐந்துஆண்டுகளுக்கு அவர் ஆளுனராக நீடிப்பார்.இதைத் தொடர்ந்து இன்று மாலை ஆளுனராக பர்னாலா மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடந்த பதவியேற்பு விழாவில் சென்னைஉயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா பர்னாலாவுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
இந் நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநதி, அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின்தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன் மூலம் 2011ம் ஆண்டு வரை ஆளுனர் பதவியில் பர்னாலா நீடிப்பார்.












Click it and Unblock the Notifications