ரூ. 30000 கோடி முதலீட்டை இழுத்த தமிழகம்
சென்னை:
அன்னிய நேரடி முதலீடு பெறுவதில் நாட்டிலேயே தமிழகம் முன்னணியில் உள்ளதாக தமிழக தகவல்தொழில்நுட்ப செயலர் சி.சந்திரமெளலி தெரிவித்தார்.
அவர் கூறுகையில்,தகவல் தொழில்நுட்பத் துறைக்காக சென்னையிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் தமிழக அரசு நிலத்தைகையகப்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு ஒரு கம்பெனி உருவாகி வருகிறது. சென்னையில் தான் அதிக அளவில்நிறுவனங்கள் கால் பதிக்கின்றன. அந்த நிறுவனங்களுக்கு குறுகிய காலத்தில் நிலம் அளிக்க வேண்டியதுஅவசியம்.
அன்னிய நேரடி முதலீடு பெறுவதில் நாட்டிலேயே தமிழகம் முன்னணியில் உள்ளது. தற்போது ரூ. 30,600 கோடிமதிப்புள்ள 2,700 திட்டங்கள் அமலாக்கப்பட்டு வருகின்றன.
இது நாட்டின் அன்னிய நேரடி முதலீட்டில் 9.1 சதவீதம் என தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் சிறந்ததொழிலாளர்கள் கிடைக்கின்றனர். ஊதியமும் மற்ற நகர்களோடு ஒப்பிடுகையில் குறைவு.
சராசரியாக ஒரு வாரத்தில் சென்னை ஊழியர் 48 மணி நேரம் உழைக்கிறார். சீன ஊழியர்கள் 44 மணி நேரம்உழைக்கிறார்.
சென்னை தொழிலாளரின் (சாப்ட்வேர் துறையில் அல்ல, பொதுவானக) சராசரி சம்பளம் ரூ. 3,015. கொஞ்சம்நுணுக்கமான பணியில் இருப்பவர்களுக்கு ரூ.4,005 முதல் ரூ. 5,985 வரை சம்பளம் கிடைக்கிறது.
ஆனால் சீனாவில் இது ரூ. 9,990 முதல் ரூ. 25,020 வரை உள்ளது. பொது மேலாளர்கள் போன்ற உயர்அதிகாரிகள் சராசரி சம்பளம் சென்னையில் ரூ. 59,985 முதல் ரூ.64,980 வரை. அதுவே சீனாவில் ரூ. 75,015முதல் ரூ. 99,990 ஆக உள்ளது என்றார்.
சென்னையில் நோக்கியா மையம்:
இதற்கிடையே சர்வதேச நெட்வொர்க் தீர்வு மையத்தை சென்னையில் நோக்கியா நிறுவனம் தொடங்கியுள்ளது.உலகம் முழுவதும் உள்ள தனது மையங்களை நிர்வகிக்கும் பணியை சென்னை மையத்தில் அது அடுத்த மாதம்தொடங்குகிறது.
மேலும், ஹட்ச் தொலைபேசியை நடத்தும் நிறுவனமான ஹட்சிசன் எஸ்ஸாரின் 19 நெட்வொர்க் மண்டலங்களைநோக்கியா பராமரிக்கவுள்ளது. இதற்காக நோக்கியா, ஹட்சிசன் இடையே ரூ.100 கோடிக்கு ஒப்பந்தம்செய்யப்பட்டுள்ளது.
தொலைபேசிக் கருவி வர்த்தகத்தில் மற்றொரு மைல் கல்லாக சீமன்ஸ் நிறுவனத்தை நோக்கியா வாங்கிவிட்டதுகுறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் தொலைபேசி கருவி வர்த்தகத்தில் ரூ. 89,550 கோடி வருவாயுடன் மிகப் பெரிய நிறுவனம் என்றநிலைக்கு நோக்கியா முன்னேறியுள்ளது.