சிறுமியிடம் வக்கிரம்-9ம் வகுப்பு மாணவன் கைது
மேட்டூர்:
ஜந்து வயது சிறுமியிடம் மிகவும் வக்கிரமாக நடந்துகொண்ட 9ம் வகுப்பு மாணவனை போலீஸார் கைதுசெய்தனர்.
கொளத்தூர் அருகே உள்ள செட்டிப்பட்டியை சேர்ந்த சிறுமி ரம்யா (5) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவள்ஒன்றாம் வகுப்பு படிக்கிறாள்.இவளது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவன் சந்தீப் கணேஷ் (13). ஒன்பதாம் வகுப்பு படிக்கும் இவன் கடந்த 17ம்தேதி மாலை தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி உமாவை தனது வீட்டு மாடிக்கு அழைத்துச் சென்றான்.
அங்கு வைத்து சிறுமியை பலவந்தப்படுத்தியுள்ளான். இதில், சிறுமி மயங்கி விழுந்தாள். பின்னர் விழித்துப்பார்த்த சிறுமி வலி தாங்காமல் கதறினாள். ஆனால், சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறினால் கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளான் சந்தீப்.
இதனால் பயத்தில் சிறுமி உமா, பெற்றோரிடம் எதுவும் கூறவில்லை. ஆனால், நேற்று முன்தினம் ரம்யா தனதுபெற்றோரிடம் நடந்ததைக் கூறினாள். இதையடுத்து மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிறுமிஅனுமதிக்கப்பட்டார்.
பின்பு சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்பேரில் கொளத்தூர் போலீசார் சந்தீப் கணேஷை கைது செய்து சிறுவர்சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications