ரீட்டா மேரி கற்பழிப்பு வழக்கு: 4 போலீசாருக்கு 10 ஆண்டு சிறை
Subscribe to Oneindia Tamil
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கிளைச் சிறையில் பெண் கைதி ரீட்டா மேரிகற்பழிக்கப்பட்ட வழக்கில் நான்கு சிறைக் காவலர்களுக்கு தலா 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒருவர் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ரீட்டா மே. இவர் கடந்த 2001ம் ஆண்டுதிண்டிவனத்தில் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு செஞ்சி கிளைச் சிறையில்அடைக்கப்பட்டார்.அங்கு சிறைக் காவலர்கள் ஐந்து பேர் ரீட்டா மேரியைக் கற்பழித்தனர். இந்த விவகாரம்அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக சேகர், ஜெயபால், நாசர், அன்பழகன், ராமசாமி ஆகிய ஐந்து சிறைக்காவலர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது திண்டிவனம் 2வது விரைவுநீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி தயாளன் இன்றுதீர்ப்பு அளித்தார்.
அதில் சேகரைத் தவிர மற்ற நான்கு பேருக்கும் தலா 10 ஆண்டு சிறைத் தண்டனைமற்றும் ரூ. 1000 அபராதம் விதிக்கப்பட்டது. சேகர் வழக்கிலிருந்துவிடுவிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications