நத்தம், சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம் தேர்தல் முடிவுகளை எதிர்த்து வழக்கு
சென்னை:
மதுரை கிழக்கு தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நன்மாறன் வெற்றிபெற்றதை செல்லாது என்று அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கைப் போலமேலும் 3 தொகுதிகளின் தேர்தல் வெற்றியை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதுரை கிழக்குத் தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்டுத் தோற்ற பூமிநாதன்,நன்மாறன் இத்தொகுதியில் வெற்றி பெற்றதை செல்லாது என்று அறிவிக்கக் கோரிசென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.இதேபோல சிங்காநல்லூர், நத்தம், மேட்டுப்பாளையம் ஆகிய தொகுதிகளில் அதிமுகவேட்பாளர்கள் பெற்ற வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரி சம்பந்தப்பட்டதொகுதிகளில் தோல்வி அடைந்த வேட்பாளர்கள் வழக்குப் போட்டுள்ளனர்.
நத்தம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் வெற்றி பெற்றார். அவரதுவெற்றி முறைகேடான வழியில் வந்தது. எனவே அதை செல்லாது என்று அறிவிக்கவேண்டும் என்று கோரி திமுக சார்பில் போட்டியிட்டுத் தோற்ற ஆண்டி அம்பலம்வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதேபோல சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுக சின்னத்தின் கீழ் போட்டியிட்டஐ.என்.டி.யூ.சியின் சின்னச்சாமி பெற்ற வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்டுத் தோற்ற செளந்தரராஜன்வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டுத் தோற்றஅருண்குமார், தன்னை எதிர்த்துப் போட்டியிட்டு வென்ற அதிமுகவின் சின்னராஜ்வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.