சசி பெயரை சொல்லி ரூ. 1.2 கோடி மோசடி
சென்னை:
சசிகலாவின் பெயரைச் சொல்லி நில மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டார். இன்னும் ஒருவர்தலைமறைவாகிவிட்டார்.
சென்னை கீழ்பாக்கத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சண்முகம். இவர் போலீஸ் கமிஷ்னர் லதிகா சரணைசந்தித்து ஒரு புகார் கொடுத்தார்.அதில், கோயம்பேட்டில் உள்ள அரசு நிலத்தை வாங்கித் தருவதாகக் கூறி டாக்டர் பாபு, விஜய்குமார், கயாரோகன் ஆகியோர் என்னிடம் ரூ. 1.2 கோடியை வாங்கினர்.
அதில் விஜய்குமார், தன்னை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினர் என்றுகூறினார். இதனால் நிலத்தை வாங்குவதில் சிரமம் இருக்காது என்றும் உறுதியளித்தார்.
இதையடுத்து பணத்தைத் தந்தேன். ஆனால் நிலத்தை அவர்கள் வாங்கித் தரவில்லை. பணத்தையும் தரமறுக்கின்றனர் என்று கூறியிருந்தார் சண்முகம்.
இது குறித்து மத்திய குற்றப் பிரிவு துணை கமிஷ்னர் சத்தியநாராயணனை விசாரிக்க உத்தரவிட்டார் லதிகா சரண்.
விசாரணை நடத்திய துணை கமிஷ்னர் கயா ரோனை உடனே கைது செய்தனர். விஜய்குமார், பாபுவைத் தேடிவந்தனர். இதில் பாபு இன்று பிடிபட்டார். விஜய்குமார் தொடர்ந்து எஸ்கேப் ஆகி வருகிறார்.












Click it and Unblock the Notifications