வேணுகோபாலை வீட்டுக்கு அனுப்புங்கள்: கி.வீரமணி
சென்னை:
சட்டவிரோதமாக அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக இயக்குனராக உள்ளடாக்டர் வேணுகோபாலை உடனடியாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று திராவிடர்கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டுக்குஆளாகியுள்ளார் வேணுகோபால்.
![]() |
இந் நிலையில் வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:டாக்டர் வேணுகோபால், வேலை நியமனங்களில் சுகாதார அமைச்சகம்தலையிடுவதால், அந்தத் துறையுடன் மோதல் நிலை ஏற்பட்டதாக கூறுகிறார்.அத்தோடு அமைச்சர் அன்புமணி மீதும் சரமாரியாக அவதூறுகளை வீசி வருகிறார்.
முதலில், டாக்டர் வேணுகோபால் இப்பதவிக்கு வந்ததே முறைகேடான வழியில்தான்.அவருக்கு 61 வயதாக இருக்கும்போது, 2003ம் ஆண்டு அவர் இயக்குனராகநியமிக்கப்பட்டார்.
எனவே சட்டவிரோதமாக பதவியில் இருந்து வரும் டாக்டர் வேணுகோபாலைஉடனடியாக வேலையை விட்டு நீக்க வேண்டும்.
வேணுகோபால் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்த மாநிலத்தலைவர்கள் வேணுகோபாலுக்கு ஆதரவாகப் பேசக் கூடாது. அப்படிச் செய்தால் மற்றமாநிலங்கள் சும்மாயிருக்காது.
இது மாநிலப் பிரச்சினை அல்ல, மனித நேயப் பிரச்சினை என்று கூறியுள்ளார்வீரமணி.













Click it and Unblock the Notifications