ஜெவுக்கு வந்த ரூ. 2 கோடி: சிபிஐ துருவல்-சபாநாயகருக்கு கடிதம்
சென்னை:
ரூ. 2 கோடி வெளிநாட்டுப் அன்பளிப்பு தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா மீது மேல் விசாரணை நடத்த அனுமதி கோரி சட்டசபை சபாநாயகருக்குசிபிஐ கடிதம் அனுப்பியுள்ளது.
கடந்த 1992ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூ. 2 கோடிக்கானகாசோலைகள் வெளிநாட்டிலிருந்து வந்தன. தனக்கு வந்த அன்பளிப்பு என்றுஅப்போது இதை ஜெயலலிதா கூறினார்.மேலும் இதுகுறிதது முறையாக கணக்கு தாக்கல் செய்யாமல்தனது வங்கிக் கணக்கில்செலுத்தி எடுத்திருந்தார். இதுதொடர்பாக கடந்த 1998ம் ஆண்டு அப்போதைய திமுகஆட்சிக்காலத்தில் சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் பின்னர் வந்த அதிமுகஆட்சியில் விசாரணை பாதிக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த வழக்குநிலுவையில் உள்ள நிலையில், தற்போது மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான அறிக்கையை சபாநாயகர் ஆவுடையப்பனுக்கு சிபிஐகண்காணிப்பாளர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி அனுப்பியுள்ளார்.
ஜெயலலிதா எம்.எல்.ஏவாக இருப்பதால் இந்த வழக்கில் மேற்கொண்டு நடவடிக்கைஎடுக்க அனுமதி தருமாறு அந்தக் கடிதத்தில் சபாநாயகரை சிபிஐ கோரியுள்ளது.












Click it and Unblock the Notifications