சோ.பாலகிருஷணன் மரணம்
பரமக்குடி:
தமிழ காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் பரமக்குடியில்மரணமடைந்தார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோ.பாலகிருஷ்ணன் கடந்த2004ம் ஆண்டு ராமேஸ்வரத்திலிருந்து பரமக்குடிக்கு காரில் வந்துகொண்டிருந்தபோது சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.அவது முதுகுவடத்தில் காயம் ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதையடுத்து மதுரையில் உள்ள மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்தார்.
நேற்று மாலை சோ.பா.வின் உடல் நலம் மோசமடைந்தது. இதையடுத்து அவரைசொந்த ஊரான பரமக்குடிக்குக் கொண்டு செல்ல உறவினர்கள் முடிவு செய்தனர்.இதைத் தொடர்ந்து சோ.பா. பரமக்குடிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு பிராண வாயு தொடர்ந்து கொடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் சோ.பா.வின் உயிர் பிரிந்தது. 70வயதாகும் சோ.பாவுக்கு மனைவி, 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். நான்கு முறைஎம்.எல்.ஏவாக இருந்துள்ளார்.
மூப்பனார் காங்கிரஸிலிருந்து பிரிந்து தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியைஆரம்பித்தபோது சோ.பாவும் அதில் இணைந்தார்.
பின்னர் காங்கிரஸுடன் தமாகா இணைந்தபோது, சோ.பா. தமிழக காங்கிரஸ்தலைவராக நியமிக்கப்பட்டார்.
சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். சோ.பாவின் இறுதிச்சடங்குகள் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுளளது.












Click it and Unblock the Notifications