முரளிதரன் மகனுக்கு உடல் நலக்குறைவு; சென்னை விரைந்தார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரனின் 5 மாத ஆண் குழந்தைக்கு வயிற்றில்அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மகனைப் பார்ப்பதற்காகலண்டனிலிருந்து முரளிதரன் அவசரமாக சென்னைக்கு வந்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த பிரபல மலர் மருத்துவமனை அதிபர் டாக்டர் ராமமூர்த்தியின்மகள் மலரைத்தான் முரளிதரன் மணந்துள்ளார். இவர்களுக்கு 5 மாதங்களுக்கு முன்புஆண் குழந்தை பிறந்தது.நரேன் என்று பெயரிடப்பட்டுள்ள குழந்தைக்கு வயிற்றில் பிரச்சினை ஏற்பட்டதால்அறுவைச் சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.
மலர் மருத்துவனையில் இந்த அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
மலரின் தாயாரும், முரளிதரனின் மாமியாருமான டாக்டர் நித்யா ராமமூர்த்தியேஅறுவைச் சிகிச்சையை செய்தார். தற்போது குழந்தை உடல் நலம் தேறி வருகிறது.
நரேனுக்கு நடந்த அறுவைச் சிகிச்சை குறித்து தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம்செய்து வரும் இலங்கை அணியில் இடம் பெற்றுள்ள முரளிதரனுக்குத்தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பயணத்திலிருந்து விலகி முரளிதரன் சென்னைக்குவந்துள்ளார்.












Click it and Unblock the Notifications