பொதுத் துறையை புறக்கணிக்கிறோமா?-ப.சி
சென்னை:
பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை என நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
சென்னை-மதுரை இடையிலான பெட்ரோலிய குழாய் இணைப்புத் திட்ட தொடக்க நிகழ்ச்சியில் பேசியசிதம்பரம்,பொதுத் துறை நிறுவனங்கள் நோய்வாய்ப்பட்டு விடாமல் தடுக்க அவ்வப்போது சில கசப்பு மருந்துகளைத் தரவேண்டியது அவசியமாகிறது. அதைத் தான் மத்திய அரசு செய்து வருகிறது. மற்றபடி மத்தியில் ஆளும் காங்கிரஸ்கூட்டணி அரசு இந்த நிறுவனங்களை புறக்கணிப்பதாக சொல்வது தவறு.
உலக கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டியஅவசியம் ஏற்பட்டுள்ளது. மிகப் பெரிய சுமை ஏற்பட்டிருந்தாலும் அதை மக்கள் மீது திணிக்காமல் குறைந்தபட்சவிலை உயர்வையே அறிவித்துள்ளார் பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா.
சர்வதேச சந்தையில் 2003-04ல் ஒரு பாரல் கச்சா எண்ணெய் 23 டாலராக இருந்தது. இன்று அதன் விலை 69டாலர். இரண்டு ஆண்டுகளில் விலை 3 மடங்கு உயர்ந்துவிட்டது.
இந்தியன் ஆயில் நிறுவனம் நமது நவரத்தின நிறுவனங்களில் ஒன்று. அது நஷ்டத்தில் மூழ்கிவிடாமல் தடுக்கபெட்ரோலிய விலை உயர்வு அவசியமாகிவிட்டது.
பொதுத் துறை நிறுவனங்களை நாங்கள் புறக்கணிக்கவில்லை. இந்த நிறுவனங்களுக்கு இரு ஆண்டுகளில் ரூ.19,696 கோடியை ஒதுக்கியுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications