2 கோடி அன்பளிப்பு: ஜெ மீது அடுத்த வாரம் சிபிஐ குற்றப் பத்திரிக்கை
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளின்போது வெளிநாட்டிலிருந்துபரிசாக வந்த ரூ. 2 கோடி பணம் குறித்த வழக்கில் அடுத்த வாரம் சிபிஐ குற்றச்சாட்டுப்பதிவு செய்யும் என்று தெரிகிறது.
முதல் முறையாக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது அவரது பிறந்த நாளுக்குப்பரிசாக வெளிநாட்டிலிருந்து ரூ. 2 கோடிக்கு காசோலைகள் வந்தன. இவை குறித்துவருமான வரித்துறைக்கு சமர்ப்பித்த கணக்கில் ஜெயலலிதா குறிப்பிடவில்லை,மறைத்துவிட்டார்.இதுகுறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு கடந்த 10ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வருகிறது. தற்போது திமுக மீண்டும்ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் இந்த வழக்கு தூசி தட்டப்பட்டுள்ளது.
எம்எல்ஏவாக உள்ள ஜெயலிலதா மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யவும், மேல்விசாரணை நடத்தவும் அனுமதி தருமாறு கோரி தமிழக சட்டசபை சபாநாயகர்ஆவுடையப்பனின் அனுமதியைக் கோரி சிபிஐ கடிதம் அனுப்பியது.
இந்தக் கடிதம் தனது பரிசீலனையில் உள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். இந்தவாரத்திற்குள் சபாநாயகரின் அனுமதி கிடைத்தும் விடும் என்றுஎதிர்பார்க்கப்படுவதால், அடுத்த வாரத்தில் ஜெயலலிதா மீது சிபிஐ நீதிமன்றத்தில்குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிபிஐக்கு பதில் தருவதற்கு முன் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரின்ஆலோசனையை ஆவுடையப்பன் பெறுவார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications