For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரையில் அரவாணிகள் சுய உதவிக் குழு!!

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

மதுரை திருமங்கலத்தில் அரவாணிகள் சேர்ந்து சுய உதவிக் குழு ஒன்றைஅமைத்துள்ளனர்.

தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் லட்சக்கணக்கில் உள்ள நிலையில்,ஆண்களுக்கும்ன சுய உதவிக் குழுக்களை அமைக்க தற்போதைய திமுக அரசுமும்முரமாக உள்ளது.

இந் நிலையில் மதுரை அருகே திருமங்கலத்தில் அரவாணிகள் சிலர் சேர்ந்து ஒரு சுயஉதவிக் குழுவை உருவாக்கியுள்ளனர். மதுரை மாவட்டத்தின் முதல் அரவாணிகள் சுயஉதவிக் குழு என்ற பெருமை இக்குழுவுக்குக் கிடைத்துள்ளது.

இந்த அரவாணிகள் குழுவில் 10 பேர் உள்ளனர். சிறு சிறு தொழில்களை செய்து அந்தஉற்பத்திப் பொருட்களை விற்று இவர்கள் சேமிப்புக்கு வழி வகுத்து மற்றவர்களைபோல வாழும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

விரைவில் வங்கிக் கடனுக்கும் விண்ணப்பிக்கப் போவதாக அரவாணி சசிகலாதெரிவித்துள்ளார்.

எல்லோரையும் போல நாங்களும் கெளரவமாக, கையில் நாலு காசுடன் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்தக் குழுவை அமைத்துள்ளோம். அதிகஉறுப்பினர்களை சேர்க்க முயற்சி எடுத்து வருகிறோம்.

விரைவில் வங்கிக் கடனுக்கு விண்ணப்பித்து கடன் கிடைத்தவுடன் மேலும் பலதொழில்களை செய்யவுள்ளோம் என்றார் சசிகலா

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X