சுனாமி நிதி: ஜெ. புகாருக்கு கருணாநிதி மறுப்பு
சென்னை :
சுனாமி நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசு தர வந்த நிதியைப் பெற ஜெயலலிதாஅரசு முயற்சிக்கவும் இல்லை, ஏற்கவும் முன் வரவில்லை என்று முதல்வர் கருணாநிதிகுற்றம் சாட்டியுள்ளார்.
சுனாமி நிவாரண நிதி தொடர்பாக முதல்வருக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையேஅறிக்கை போர் நடந்து வருகிறது.முதலில் நிதியை முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்று கருணாநிதி குற்றம்சாட்டினார். அதை மறுத்த ஜெயலலிதா, 806 கோடி மட்டும்தான் மத்திய அரசுகொடுத்தது என்றார்.
இதற்கு தற்போது கருணாநிதி பதில் அளித்தார். இதுதொடர்பாக அவர்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
ராஜீவ் காந்தி மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ. 2347.19 கோடி நிதியைஒதுக்கியது. உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சிநிறுவனம் ஆகிய பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மூலம் ரூ. 2,549.88 கோடிஅனுமதிக்கப்பட்டது.
ஆக மொத்தம் மத்திய அரசு சொந்த நிதி மற்றும் பன்னாட்டு நிதி நிறுவனங்களின்உதவி பெற்று தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்டது மொத்தம் 4,897.07 கோடி.
மத்திய அரசு தருவதாக அறிவித்த நிதியில் ரூ. 820.31 கோடி இதுவரைவிடுவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் சுனாமி மறு சீரமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.207.5 கோடி முன் பணமாக தரப்பட்டுள்ளது.
மொத்தம் ரூ. 1027.81 கோடி ஒதுக்கியதில், தமிழக அரசு இதுவரை ரூ. 806கோடியைத்தான் செலவு செய்துள்ளது. மத்திய அரசு, உலக வங்கி விடுவித்ததொகையை விட அதிமுக அரசு கூடுதல் செலவு செய்யவில்லை.
நிவாரணப் பணிகள் மற்றும் மறு சீரமைப்புப் பணிகளுக்கு அரசாணைகள் வழங்கி,செலவு செய்து, அறிக்கைகளை மத்திய அரசுக்கு அனுப்பி, மத்திய அரசின்ஒதுக்கீட்டில் இருந்து நிதியைப் பெற வேண்டியது மாநில அரசின் கடமை.
அதை செய்யாமல் விட்டு விட்டு மத்திய அரசை நான் தூண்டி விட்டுத் தடுத்துவிட்டதாகவும், மத்திய அரசு மாற்றாந்தாய் மனநிலையோடு நடந்து கொண்டதாகவும்ஜெயலலிதா கூறியிருப்பது இட்டுக் கட்டிய பொய்யாகும்.
பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் அரசு சார்பில் வீடு கட்டவோ,தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து முடிக்கவோ அக்கறை காட்டாதஜெயலலிதா அரசு, சொந்த நிதி ஆதாரத்தில் இருந்து ரூ. 1,136 கோடி செலவுசெய்ததாக சொல்வது மக்களை ஏமாற்றும் மோசடி வேலையாகும்.
சுனாமி நிவாரணத்துக்கென மாவட்ட ஆட்சியர்களின் சிறப்புக் கூட்டம்நடத்தப்பட்டதா என்ற கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் நாங்கள அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தினோம் என்கிறார் ஜெயலலிதா என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications