அகதிகளிடம் குறை கேட்ட திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

மண்டபம்:

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் தங்கியுள்ள அகதிகளை சந்தித்துவிடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் குறை கேட்டார்.

இலங்கையிலிருந்து தமிழகம் வரும் அகதிகள் மண்டபத்தில் உள்ள அகதிகள்முகாக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இங்கிருந்து பல்வேறு முகாம்களுக்குப்பிரித்து அனுப்பப்படுகிறார்கள். பெரும்பாலும் மண்டபம் முகாமிலேயேபெரும்பாலான அகதிகள் தங்கியுள்ளனர்.

மண்டபம் முகாம் உள்ளிட்ட அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகள் சரியாகஇல்லை என்று புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்க 2 அமைச்சர்களை கொண்டகுழுவை சமீபத்தில் கருணாநிதி அனுப்பி வைத்திருந்தார். அந்தக் குழுவும்,அகதிகளின் நிலை படு மோசமாக இருப்பதாக முதல்வருக்கு அறிக்கை ஒன்றைத்தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன்மண்டபம் முகாக்குச் சென்று அகதிகளை சந்தித்தார். அவர்களிடம் எப்படிஇருக்கிறீர்கள், வசதிகள் போதுமானதாக உள்ளதா, என்ன குறைகள் உள்ளது என்பதுகுறித்து கேட்டறிந்தார்.

பின்னர் அகதிகள் முகாமையும் திருமாவளவன் சுற்றிப் பார்த்தார். அதன்பின்னர்அகதிகள் குறை தீர்ப்பு துணை ஆட்சியரையம் சந்தித்து மனு கொடுத்தார்.

பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அகதிகள் முகாமில் அடிப்படைவசதிகள் போதுமானதாக இல்லை. அங்கு பகலில் மின்சார விநியோகம் அறவேகிடையாது. இரவில் மட்டுமே மின்சாரம் கொடுக்கிறார்கள். கழிப்பறை வசதிகளும்சரியாக இல்லை. பெண்கள் இதனால் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

கட்டடங்கள் அனைத்தும் மிகவும் பாழடைந்து போய் உள்ளன. பல கட்டடங்கள்எப்போது இடியுமோ என்ற நிலையில் உள்ளன. அடிப்படை வசதிகள் அறவேசரியில்லாத நிலையில் மண்டபம் முகாம் உள்ளது. எனவே அகதிகளின் நிலையைக்கருத்தில் கொண்டு இந்த அவல நிலையைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் திருமாவளவன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+