கும்பகோணம் தீ விபத்து-விசாரணை ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்:
கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு விசாரணை ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கும்பகோணத்தில் கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி நடந்த ஸ்ரீகிருஷ்ணாபள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பரிதாபமாக பலியாயின.நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளிக்கூட தாளாளர் ரங்கசாமி,அவரது மனைவி சரஸ்வதி, தலைமை ஆசிரியை சந்தான லட்சுமி உள்ளிட்ட 24 பேர்கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது கும்பகோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டது.
இந்த வழக்கில் ஏற்கனவே குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு நேற்று குற்றப் பத்திரிக்கை நகல் வழங்கப்படுவதாகஇருந்தது. ஆனால், நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கை ஜூலை 4ம்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
அன்றைய தினம் குற்றப் பத்திரிக்கை நகல் வழங்கப்படும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications