For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜ்யசபா- கேபிகே குமரன் மனு தாக்கல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ராஜ்யசபா இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கே.பி.கே.குமரன் இன்றுவேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

சரத்குமார் ராஜினாமா செய்ததால் காலியான ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு வருகிற 13ம்தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக சார்பில் தினகரன்நாளிதழின் முன்னாள் நர்வாக இயக்குனரும், முன்னாள் அமைச்சர்கே.பி.கந்தசாமியின் மகனுமான கே.பி.கே.குமரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

குமரன் இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். தலைமைச் செயலகத்தில்தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவிடம் தனது மனுவை குமரன் வழங்கினார்.

அந்த மனுவை முதல்வர் கருணாநிதி, நிதி அமைச்சர் அன்பழகன் உள்ளிட்ட 10 பேர்முன் மொழிந்திருந்தனர்.

மனு தாக்கலின்போது அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின், துரைமுருகன்,வீரபாண்டி ஆறுமுகம், ஏ.வ.வேலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தேர்தலில் போட்டி இருந்தால் 13ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். தற்போதுள்ளசூழ்நிலையில் குமரன் போட்டியின்றி தேர்வு செய்யப்படும் நிலை உள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X