தூக்கப்படுகிறார் நரேஷ் குப்தா? இணை தேர்தல் அதிகாரிகளுக்கு கல்தா!
சென்னை:
இணைத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றி வந்த 2 பேரின் பணிநீட்டிப்பை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. அடுத்து தலைமைத் தேர்தல் அதிகாரிநரேஷ் குப்தாவும் மாற்றப்படலாம் எனத் தெரிகிறது.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக நரேஷ் குப்தாவும் இணைத் தலைமைத்தேர்தல் அதிகாரிகளாக பிரகதா மற்றும் ராமன் ஆகியோர் உள்ளனர்.இவர்களில் பிரகதாவின் பதவிக்காலம் முடிந்து விட்டது. அவர் கடந்த நான்கரைவருடங்களாக பணி நீட்டிப்பில் இருந்து வந்தார். அதேபோல ராமன் கடந்த ஒருவருடமாக பணி நீட்டிப்பில் இருந்து வந்தார்.
தற்போது இருவரது பணி நீட்டிப்பையும் தமிழக அரசு ரத்து செய்துள்ளது. இதற்குமத்திய தேர்தல் ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது.
தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் சில மூத்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகொடுக்கப்படாமல் உள்ளது. இவர்களுக்கு பதவி உயர்வு கொடுக்க வேண்டும்என்பதற்காகவே இரு இணை தேர்தல் அதிகாரிகளையும் அரசு வீட்டுக்குஅனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவையும் வேறு துறைக்குமாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது திமுகவின் கடும் விமர்சனங்களையும்,ஆட்சேபனைகளையும் சம்பாதித்தவர் நரேஷ் குப்தா என்பது குறிப்பிடத்தக்கது.
குப்தாவின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று கருணாநிதியே பகிரங்கமாககுற்றம் சாட்டியிருந்தார். இதேபோல ஜெயலலிதாவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இதுகுறித்து அப்போது குப்தாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, தேர்தல்ஆணையத்தின் செயல்பாட்டில் திருப்தி இல்லாவிட்டால் தாராளமாக என்னைமாற்றிவிடலாம். அதற்கான வசதிகள் நிறையவே உள்ளன என்று பதிலளித்திருந்தார்.
இந் நிலையில் முதல் கட்டமாக இணை தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தமிழகஅரசு ஆப்பு வைத்துள்ளது. அடுத்து குப்தாவின் தலையும் உருளலாம் எனத்தெரிகிறது.












Click it and Unblock the Notifications