For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விடுதலைப்புலிகள் தாக்குதல்: 4 கடற்படை வீரர்கள் பலி

By Staff
Google Oneindia Tamil News

காங்கேசன்துறை:

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை கடற்படையினருக்கும் இடையே நடந்தமோதலில் 4 கடற்படை வீரர்கள் பலியாயினர். விடுதலைப் புலிகளின் 2 படகுகள்மூழ்கடிக்கப்பட்டன.

இலங்கையில் போர் பதட்டம் அதிகரித்து வருகிறது. இலங்கை படைகளுக்கும்,விடுதலைப் புலிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது.

இந்த நிலையில் மன்னார் மாவட்டம் காங்கேசன் துறை பகுதியில் விடுதலைப்புலிகளின் கடற் புலிகள் பிரிவினருக்கும், இலங்கை கடற்படையினருக்கும் இடையேமோதல் வெடித்தது.

காங்கேசன் துறை பகுதியில் உள்ள கடற்படை முகாம் மீது விடுதலைப் புலிகள்அதிரடி தாக்குதல் நடத்தினர். சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த மோதலில் நான்குகடற்படை வீரர்கள் பலியாயினர்.

விடுதலைப் புலிகள் மீது கடற்படை நடத்திய பதில் தாக்குதலில் அவர்களின் 2படகுகள் தீப்பிடித்து எரிந்தன. இதில் ஒரு விடுதலைப் புலி கொல்லப்பட்டார்.

இதேபோல மன்னார் பகுதியில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அலுவலகத்தைநோக்கி விடுதலைப் புலிகள் குண்டு வீசித் தாக்கினர். ஆனால் குறி தவறியதால்அலுவலகம் பாதிக்ப்படவில்லை. உயிரிழப்பும் ஏற்படவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X