கொலை செய்வதுதான் எங்களது வேலையா? பாப்பா சுந்தரம், மகன் குமுறல்!
குளித்தலை:
ஒரு ஆசிரியையைக் கடத்திக் கொல்வதுதான் எங்களது வேலையா? எங்களுக்கும்குடும்பம் இருக்கிறது. அதை விட்டு விட்டு கடத்திக் கொல்லும் அளவுக்கு நாங்கள்இல்லை என்று குளித்தலை ஆசிரியை மீனாட்சி வழக்கில் சர்ச்சைக்குள்ளாகியுள்ளமுன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. பாப்பா சுந்தரம் மற்றும் அவரது மகன் கருணாகரன்ஆகியோர் கூறியுள்ளனர்.
ஒன்னேக்கால் ஆண்டுகளுக்க முன்பு காணாமல் போன ஆசிரியை மீனாட்சி வழக்குசமீபத்தில் புதிய திருப்பத்தைக் கண்டது. ஆசிரியை கடைசியாக காணப்பட்பணிக்கம்பட்டி அருகே உள்ள கிராமத்தில் ஒரு எலும்புக் கூடுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது.எலும்புக் கூட்டின் மீது இருந்த சேலை உள்ளிட்ட பொருட்கள் மீனாட்சியுடையதுஎன்று அவரது கணவர் மற்றும் உறவினர்கள், உடன் வேலை பார்த்த ஆசிரியைஆகியோர் அடையாளம் காட்டியுள்ளனர்.
இதையடுத்து இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டது. தற்போது வழக்குவிசாரணையை முடுக்கி விட்டுள்ள சிபிசிஐடி போலீஸார் முன்னாள் அதிமுகஎம்.எல்.ஏ. பாப்பா சுந்தரம், அவரது மகன் கருணாகரன், உறவினர் ரங்கநாதன்உள்ளிட்டோரை மீண்டும் விசாரித்து வருகின்றனர்.
மேலும், பாப்பா சுந்தரம் உள்ளிட்ட 32 பேரை விசாரணைக்கு வருமாறு குளித்தலைவட்டாட்சியரும் (தாசில்தாரும்) சம்மன் அனுப்பியுள்ளார். இந்த நிலையில் ஆசிரியைமீனாட்சியைக் கொல்வதுதான் எங்களது வேலையா என்று கருணாகரன் கோபமாககேட்டுள்ளார்.
இதுகுறித்து பாப்பா சுந்தரம் கூறுகையில், மீனாட்சியின் எலும்புக் கூடுகண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக என்னிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணைநடத்தியதாக வெளியாகியுள்ள செய்தி தவறு.
என்னை யாரும் விசாரிக்கவில்லை. தேவைப்பட்டால் எப்போது வேண்டுமானாலும்,என்னையும், எனது குடும்பத்தினரையும் போலீஸார் விசாரிக்கலாம்.
போலீஸ் விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு தருவோம். போலீஸார் இன்னும்துரிதமாக செயல்பட்டு உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்க வேண்டும்.
இந்த விவகாரத்திற்கும், எனக்கும், எனது குடும்பத்திற்கும் எந்த சம்பந்தம் இல்லை.நான் நிரபராதி என்றார் பாப்பா சுந்தரம்.
அப்போது அருகில் இருந்த அவரது மகன் கருணாகரன் கூறுகையில், கடந்த 2வருடங்களாக இந்த வழக்கில் எங்களை சம்பந்தப்படுத்தி செய்திகள் வந்துகொண்டுள்ளன.
எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. அதைப் பார்ப்பதை விட்டு ஒரு ஆசிரியையைகடத்திச் சென்று கொலை செய்வதுதான் எங்களது வேலையா? என்றார்.












Click it and Unblock the Notifications