ஜெயமாலா தொட்ட சிலை எது? விளக்குகிறார் சாட்சி
சேலம்:
நடிகை ஜெயமாலா தொட்டதாக கூறுவது கருவறைக்குள் உள்ள ஐயப்பன் சிலையைஅல்ல, நான் செய்து கொடுத்த சிலையைத்தான் என்று சேலம் அகில உலக ஐயப்பாமிஷன் நிறுவனத் தலைவர் ராஜமங்களம் என்பவர் கூறியுள்ளார்.
சேலம், சின்ன திருப்பதியைச் சேர்ந்தவர் ராஜமங்களம். தியானம் மற்றும் யோகா கலைஆசிரியரான இவர் அகில உலக ஐயப்பா மிஷன் நிறுவனம் என்ற சேவைநிறுவனத்தை நடத்தி வருகிறார்.ஜெயமாலா ஐயப்பன் சிலையைத் தொட்ட விவகாரம் குறித்து ராஜமங்களம்கூறுகையில்,
கடந்த 1977ம்ஆண்டு சுவாமி மலையில் உள்ள சிற்பப் பாடசாலையில் ஆசிரியராகப்பணியாற்றிய வைத்தியநாத ஸ்தபதியின் கனவில் ஐயப்பன் வந்தார். அப்போது சேலம்சுகவனேஸ்வரர் ஆலயத்தையும், எனது அடையாளத்தையும் காட்டி, ஐயப்பன் சிலையவடிவமைத்துத் தருமாறு கூறினார்.
அதன்படி வைத்தியநாத ஸ்தபதி சுகவனேஸ்வரர் ஆலயத்துக்கு வந்து 3 நாள்காத்திருந்து என்னை சந்தித்தார். தான் கனவில் கண்டதை என்னிடம் தெரிவித்தார்.அதன்படி பஞ்சலோகத்தில் ஆன அரை அடி உருவ ஐயப்பன் சிலைஉருவாக்கப்பட்டது.
![]() |
அப்போதுதான் கூட்ட நெரிசல் காரணமாக ஒரு பெண், நான் கொண்டு வந்தசிலையின் மீது விழுந்தார். விழுந்த வேகத்தில் சிலையைத் தொட்டுக் கும்பிட்டார்.நானும் சிலை மீது இருந்த பூவை எடுத்து அந்தப் பெண்ணிடம் அளித்தேன்.
அப்போது அவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை. இப்போது நடிகை ஜெயமாலாகொடுத்த பேட்டிக்குப் பின்னர்தான் அவர்தான் நான் கொண்டு சென்ற சிலையின் மீதுவிழுந்தவர் என்று தெரிய வந்தது.
எனவே கருவறைக்குள் நுழைந்து சிலையைத் தொட்டதாக அவர் கூறுவது உண்மைஅல்ல. நான் கொண்டு சென்ற சிலையைத்தான் அவர் தொட்டு வணங்கினார்.
கருவறைக்குள் மேல் சாந்தி, கீழ்சாந்தி, தந்திரி ஆகியோரைத் தவிர வேறு யாரும்நுழைய முடியாது. எனவே இந்த சர்ச்சைக்கு இத்தோடு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றார் ராஜமங்களம்.













Click it and Unblock the Notifications