For Daily Alerts
Just In
மீண்டும் சுனாமி நிவாரண கணக்கெடுப்பு
தூத்துக்குடி:
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து மீண்டும் கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது.பாதிக்கப்பட்ட அனைத்து மீனவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என தமிழகமீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி கூறியுள்ளார்.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மீன் பிடி துறைமுகஆழப்படுத்தும் பணியை அமைச்சர் சாமி தொடங்கி வைத்தார்.பின்னர் அவர் பேசுகையில், சுனாமி நிவாரணத்திற்காக மத்திய அரசு ரூ. 4500 கோடிநிதியை தமிழக அரசுக்கு வழங்கியது. ஆனால் அதிமுக அரசு அதை முறையாகசெலவிடாமல் வெறும் 821 கோடியை மட்டும் செலவு செய்தது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெரும்பாலான மீனவர்களுக்கு உரியநிவாரணம் கிடைக்கவில்லை. எனவே மறுபடியும் முழுமையான கணக்கெடுப்புநடத்தப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட மீனவர்கள் அனைவருக்கும் முறையான நிவாரணம் கிடைக்கும்என்றார் சாமி.
Comments
Story first published: Sunday, July 2, 2006, 5:30 [IST]