இன்று சரணடைகிறார் எஸ்.எஸ்.சந்திரன்?

Subscribe to Oneindia Tamil

மதுரை:

வரதட்சணைக் கொடுமை வழக்கில் தலைமறைவாகியுள்ள அதிமுக எம்.பியும்,நடிகருமான எஸ்.எஸ்.சந்திரன் இன்று மதுரை நீதிமன்றத்தில் சரணடையக் கூடும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியனின் மகள் லதா.இவருக்கும் எஸ்.எஸ்.சந்திரனின் தம்பி மகன் தனசேகரனுக்கும் இடையே 4ஆண்டுகளுக்கு, திருமணம் நடந்தது.

அதன் பின்னர் எஸ்.எஸ்.சந்திரன் குடும்பத்தினர் லதாவை வரதட்சணை கூடுதலாககேட்டு கொடுமைப்படுத்தியதாக லதா தரப்பு கூறுகிறது. இருவரும் கடந்த 1ஆண்டுக்கு முன்பு பிரிந்து விட்டனர்.

தனசேகரன், எஸ்எஸ் சந்திரனின் வீட்டில் தான் வசித்து வருகிறார்.

இந் நிலையில் சில நாட்களுக்கு முன் லதா மதுரை போலீஸில் புகார் கொடுத்தார்.அதன் பேரில் சென்னை வந்த மதுரை போலீஸார் சந்திரன் வீட்டில் அதிரடியாகசோதனை நடத்தி தனசேகரனைக் கைது செய்தனர்.

இந்த வழக்கில் எஸ்.எஸ்.சந்திரனும் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், அவர்தலைமறைவாகி விட்டார். அவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் எஸ்.எஸ்.சந்திரன் இன்றைக்குள் மதுரை அல்லது சென்னைநீதிமன்றத்தில் சரணடையக் கூடும் எனத் தெரிகிறது.

அவரை சரணடைய விடாமல் தடுத்து கைது செய்ய சென்னை மற்றும் மதுரைபோலீஸார் உஷார் நிலையில் உள்ளனர்.

இதற்கிடையே, கேரளாவில் உள்ள ஒரு திரைப்படத் தயாரிப்பாளின வீட்டில் சந்திரன்பதுங்கி இருப்பதாக தகவல் வெளியானது.

அதன் பேரில் தனிப்படை போலீஸார் கேரளாவுக்கும் விரைந்துள்ளனர்.

எஸ்.எஸ்.சந்திரன் மாறு வேடத்தில் உலவிக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

போலீஸ் கெடுபிடிகள் அதிகமாக இருப்பதால் முதலில் முன் ஜாமீன் கோரி மதுரைஅல்லது சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து பின்னர் வெளியில் வரஅவர் திட்டமிடக் கூடும் எனவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+